;
Athirady Tamil News

ட்ரம்பை கொலை செய்ய 12 மணிநேரம் காத்திருந்த கொலையாளி : வெளிவரும் பகீர் தகவல்கள்

0

அமெரிக்க(us) முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய குடியரசுகட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான டொனால்ட் டிரம்பை(donald trump) கொலை செய்ய முயற்சித்தார் என குற்றம்சாட்டப்பட்டவர் டிரம்பிற்காக 12 மணித்தியாலங்கள் காத்திருந்தமை தற்போது விசாரணையில் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவத்தில் ரையன் ரூத் என்ற 58 வயது சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டார்.

டிரம்பினை கொலை செய்ய முயற்சித்தார் என கைது செயயப்பட்டவருக்கு எதிராக காவல்துறையினர் துப்பாக்கிகள் தொடர்பான இரண்டு குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.

எவ்வாறு நெருங்கிச் செல்ல முடிந்தது
டிரம்பின் கோல்ப் விஜயம் பகிரங்கமாக அறிவிக்கப்பட்ட ஒன்றில்லை சந்தேகநபர் துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொள்ளவில்லை, எனினும் ஆயுதமேந்திய நபர்களினால் இரண்டு தடவைகள் எவ்வாறு நெருங்கிச் செல்ல முடிந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.

டிரம்பின் கோல்ப் மைதானத்திற்கான விஜயம் பகிரங்கமாக அறிவிக்கப்பட்;ட ஒன்றில்லை என அமெரிக்க இரகசிய சேவைபிரிவின் இயக்குநர் ரொனால்ட் ரோவே தெரிவித்துள்ளார்.

டிரம்ப் அங்கு வருவாரா
டிரம்ப் அங்கு வருவாரா என்பது சந்தேகநபருக்கு தெரிந்திருந்ததா என்பது குறித்து உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. அந்த பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இரகசிய சேவைபிரிவின் முகவர் ஒருவர் , டிரம்ப்க்கு மிக அருகில் உள்ள பற்றைக்குள் இருந்து துப்பாக்கியொன்று தென்படுவதை பார்த்த பின்னர் இரகசிய சேவை பிரிவினர் துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளனர்.

திடீரென துப்பாக்கி வேட்டுக்களின் சத்தத்தை கேட்டோம், நான்கைந்து சத்தங்கள் என டிரம்ப் சமூக ஊடக நிகழ்வில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தனது பாதுகாப்பிற்கு மேலும் பலர் தேவை என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

12 மணிநேரம் காத்திருந்த கொலையாளி
சந்தேகநபர் வாகனத்தில் தப்பியோடியதாக கூறப்படும் நிலையில்,அவர் கைதுசெய்யப்பட்டார். சந்தேகநபர் தனது வேறு காரிலிருந்து திருடிய இலக்கத்தகட்டினை தனது காருக்கு பயன்படுத்தியுள்ளார்.

அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கையடக்க தொலைபேசி மூலம் சம்பவம் இடம்பெறுவதற்கு 12 மணித்தியாலங்களிற்கு முன்னரே அவர் கோல்ப் திடலில் காணப்பட்டதை உறுதி செய்ய முடிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.