;
Athirady Tamil News

சில நாட்களில் பிரித்தானியா திரும்புகிறார் இளவரசர் ஹரி: ஆனால்

0

சமீபத்தில் தனது 40ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய பிரித்தானிய இளவரசர் ஹரி, இந்த மாத இறுதியில் பிரித்தானியாவுக்கு வருகை தர இருக்கிறார்.

பிரித்தானியா திரும்பும் இளவரசர் ஹரி
இளவரசர் ஹரி, இம்மாதம், அதாவது, செப்டம்பர் 30ஆம் திகதி, லண்டனில் நடைபெற இருக்கும் WellChild Awards என்னும் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சிக்காக பிரித்தானியா வர இருக்கிறார்.

ஆனால், அவருடன் அவரது மனைவியான மேகன் வருவது குறித்த எந்த தகவலும் இல்லை.

தனது தாய் டயானாவின் சகோதரி கணவரின் இறுதிச்சடங்குக்காக ஏற்கனவே ஒருமுறை ஹரி பிரித்தானியா வந்திருந்தார்.

அந்த நிகழ்ச்சியில் வில்லியமும் ஹரியும் பங்கேற்ற நிலையிலும், இருவரும் ஒரு வார்த்தை கூட பேசிக்கொள்ளவில்லை.

ஆனால், ஞாயிற்றுக்கிழமை தனது 40ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய ஹரிக்கு, இளவரசர் வில்லியமும் அவரது மனைவி கேட்டும் பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார்கள்.

ஆக, இம்முறை வரும்போதாவது ஹரியும் வில்லியமும் பேசிக்கொள்வார்களா என்பதை அறிய ராஜ குடும்ப ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.