;
Athirady Tamil News

ராஜஸ்தானில், ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி உயிருடன் மீட்பு

0

இந்தியா (India) – ராஜஸ்தான் (Rajasthan) மாநிலத்தில், ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தையொன்று 18 மணி நேரத்திற்கு பின்னர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

நீரு குர்ஜர் என்ற இரண்டரை வயது பெண் குழந்தையொன்று மூடப்படாத ஆழ்துளைக் கிணற்றிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த போது தவறி விழுந்தது.

இதன்போது சுமார் 35 அடி ஆழத்தில் குழந்தை சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மீட்புக்குழு
இதையடுத்து மீட்புக்குழுவினரால் மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், 18 மணி நேரப் போராட்டத்துக்குப் பின் குழந்தையை பத்திரமாக மீட்டுள்ளனர்.

குழந்தையின் உடல்நிலை மோசமாகி உள்ளதால் தற்போது சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து தௌசா மாவட்ட காவல்துறை எஸ்.பி. ரஞ்சிதா சர்மா கூறுகையில், “தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப்படையினர் காவல்துறையினர் உள்ளிட்ட எங்கள் துறைகளின் முயற்சியால் சிறுமியை மீட்டுப் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.