;
Athirady Tamil News

பங்களாவில் ஏற்பட்ட திடீர் வெடிப்பு: பிரித்தானியாவில் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!

0

பிரித்தானியாவில் உள்ள பங்களாவில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பிரித்தானியாவில் வெடிப்பு விபத்து
பிரித்தானியாவின் கென்ட் பகுதியில் உள்ள பங்களாவில் ஏற்பட்ட வெடிப்பு விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த வெடிப்பு சம்பவமானது வியாழக்கிழமை காலை ஆஷ்போர்டுக்கு(Ashford) அருகில் உள்ள சார்ரிங்கின்(Charing) கேன்டர்பரி சாலையில்(Canterbury Road) அமைந்துள்ள சொத்தில் அரங்கேறியுள்ளது.

காலை 11.50 மணியளவில் சம்பவ இடத்திற்கு வந்த அவசர சேவைகள் பெண்ணுக்கு தேவையான முதலுதவிகள் செய்தனர்.

பின்னர் வான் ஆம்புலன்ஸ் சேவைகளின் உதவியுடன் லண்டனில் உள்ள கிங்ஸ் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்ட பெண் சிறிது நேரத்தில் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார்.

இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட குடும்ப நாய் ஒன்று மருத்துவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் பங்களாவில் ஏற்பட்ட வெடிப்பு விபத்துக்கான காரணம் குறித்து கென்ட் தீயணைப்பு மற்றும் மீட்புப் பிரிவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.