;
Athirady Tamil News

நீர்வேலியில் தீ – மூதாட்டி உயிரிழப்பு

0

யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியில் வீடொன்று இன்றைய தினம் சனிக்கிழமை தீ பற்றியதில், வீட்டில் தனிமையில் இருந்த 65 வயதான மூதாட்டி உயிரிழந்துள்ளார்.

வீடு தீப்பற்றி எரிவதனை கண்ணுற்ற அயலவர்கள் தீயினை அணைக்க முற்பட்டதுடன், யாழ். மாநகர சபை தீயணைப்பு படையினருக்கும் அறிவித்ததை அடுத்து தீயணைப்பு படையினர் விரைந்து வந்து, தீயினை அணைத்தனர்.

வீட்டில் இருந்த மூதாட்டி உயிரிழந்துள்ளார்.

வீட்டில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் தீ பற்றிய நிலையில் வீட்டின் வெளியே காணப்பட்டுள்ளது.

சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதா ? அல்லது நாசகார செயலா என தெரியாத நிலையில் யாழ்ப்பாண தடயவியல் பொலிஸார் சம்பவ இடத்தில் தடயவியல் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதேவேளை சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாரும் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.