;
Athirady Tamil News

வாக்களிக்க சென்ற பெண் விபத்தில் சிக்கினார்

0

வாக்களிக்க சென்றுக்கொண்டிருந்த பெண்ணின் மீது ஓட்டோ மோதியதில், காயமடைந்த பெண், டிக்கோயா-கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம், இன்று (21) காலை 10.30 மணியளவில் மஸ்கெலியா- நல்லத்தண்ணி வீதியில் ப்ரௌன்லோ பகுதியில் இடம் பெற்றுள்ளது.

விபத்தில் மஸ்கெலியா குடாமஸ்கெலியா பகுதியில் சென்ற ஜராங்கணி (வயது 61) என்ற பெண்ணே காயமடைந்துள்ளார்.

மஸ்கெலியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா -கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.