;
Athirady Tamil News

தபால் மூல வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பம்

0

இலங்கையின் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நடவடிக்கை நிறைவடைந்துள்ள நிலையில் தபால் மூல வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.

நாட்டின் பல பகுதிகளிலும் வாக்களிக்கும் நடவடிக்கையானது இன்று (21.09.2024) காலை ஏழு மணிக்கு ஆரம்பமாகியிருந்தது.

இந்த நிலையில் நான்கு மணியுடன் வாக்களிப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்திருந்தது.

ஜனாதிபதித் தேர்தலின் முதல் முடிவுகள்
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் முதல் முடிவுகள் இன்று நள்ளிரவுக்குள் வெளியாகும் என தேர்தல் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தல் மூலமான வாக்குகளாகவோ அல்லது பதிவான வாக்குகளின் மூலமாகவோ முதல் தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்பது வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள அதிகாரிகளின் திறமையைப் பொறுத்தே அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.