;
Athirady Tamil News

நெடுந்தீவு வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்குப் பெட்டிகள் உலங்குவானூர்தி மூலம் வருகை

0

இன்று (21.09.2024) நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக, நெடுந்தீவில் அமைக்கப்பட்ட வாக்களிப்பு நிலையங்களில் இருந்து, வாக்குப்பெட்டிகளை கையளிப்பதற்கான உலங்குவானூர்தி பி.ப 05.10 மணிக்கு வாக்கெண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் தரையிறங்கியது.

நெடுந்தீவிலிருந்து உலங்குவானூர்தி மூலம் வருகை தந்த சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களையும், விமானிகளையும்
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் மற்றும் உதவித் தேர்தல்கள் ஆணையாளர் இ.கி. அமல்ராஜ் , மற்றும் வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஏ.ஜெ. ஹாலிங்க ஜெயசிங்க ஆகியோா் வரவேற்றார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.