;
Athirady Tamil News

வாக்குச் சாவடியில் பரிதாபமாக உயிரிழந்த சஜித் கட்சியின் பார்வையாளர்!

0

இரத்தினபுரில் உள்ள வாக்களிப்பு நிலையம் ஒன்றில் ஐக்கிய மக்கள் கட்சியின் (SJB) சார்பில் பார்வையாளராக இருந்த 68 வயதுடைய நபர் ஒருவர் திடீர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று காலை 8.00 மணியளவில் சீவாலி மத்திய கல்லூரி வாக்களிப்பு நிலையத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் நெஞ்சுவலி காரணமாக உடனடியாக இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அவரது சுகயீனம் வாக்களிப்பு நிலையத்தின் வாக்களிப்பு நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தவில்லை என இரத்தினபுரி மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.