;
Athirady Tamil News

இலட்சக்கணக்கான மக்கள் வாக்களிக்கவில்லை! வெளியான விபரம்

0

நாட்டில் சுமார் நாற்பது லட்சம் பேர் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி தேர்தல்
இன்றைய தினம் மாலை 4.00 மணியுடன் நிறைவடைந்த ஜனாதிபதி தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 75 வீதமானவர்கள் வாக்களித்துள்ளனர்.

இதன்படி, சுமார் 40 லட்சம் பேர் வாக்களிக்கத் தவறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு இம்முறை தேர்தலில் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.