;
Athirady Tamil News

வெளியாகப்போகும் தேர்தல் முடிவுகள்: அநுர தரப்பு வெளியிட்டுள்ள அறிக்கை

0

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் வெளியாவது தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையானது, தேசிய மக்கள் சக்தி இதனை குறிப்பிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “2024 ஜனாதிபதித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் வெளியாவதில் எவ்வித முறைகேடுகளுக்கும் இடமளிக்காமல் மிகத் துல்லியமாகவும் தெளிவாகவும் பணிகளைச் செய்ய தேர்தல் ஆணையமும் தொடர்புடைய அதிகாரிகளும் பணியாற்றுவார்கள் என்று நம்புகிறோம்.

ஊரடங்கு சட்டம்
வாக்கு எண்ணும் மையங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறை உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் பணியாற்றுவார்கள் என்றும் நம்புகிறோம்.

இந்த நிலையில் இரவு நேர ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவது தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பொது அமைதியை நிலைநாட்டும் நோக்கத்தில் மட்டுமே செய்யப்படுவதாக நாங்கள் நம்புகிறோம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளளது.

“சற்று முன்னர் நாடளாவிய ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டமையை தொடர்ந்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.