;
Athirady Tamil News

கடந்த 24 மணி நேரத்தில் 44 பேர் கொலை: காசா-லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்

0

கடந்த 24 மணி நேரத்தில் லெபனான் மற்றும் காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 44 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் தாக்குதல்
காசா உடனான போர் தாக்குதலுக்கு மத்தியில் இஸ்ரேல் மீது லெபனான் 150க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவு தாக்குதல் நடத்தியது.

இதற்கு பதிலடி வழங்கும் விதமாக லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை முன்னெடுத்தது.

இந்த தாக்குதலில் 3 குழந்தைகள், 7 பெண்கள் உட்பட குறைந்தது 31 பேர் கொல்லப்பட்டதாக நாட்டின் சுகாதார அமைச்சர் Firas Abiad தெரிவித்துள்ளார்.

மேலும் படுகாயமடைந்த 68 பேரில் 15 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், லெபனான் மற்றும் காசா மீது கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 44 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

முக்கிய மூத்த தளபதி பலி
இதற்கிடையில், லெபனான் மீதான இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் தகவல் படி, லெபனான் தலைநகர் பெய்ரூட்(Beirut) மீது இஸ்ரேலிய படைகள் நடத்திய இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த படை தளபதி இப்ராஹிம் அகில்(Ibrahim Aqil) கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.