;
Athirady Tamil News

நெருக்கடியை மீறி இம்ரான் கட்சி பேரணி

0

போலீஸாரின் கடும் நெருக்கடிக்கு இடையிலும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் (பிடிஐ) கட்சி லாகூரில் சனிக்கிழமை நடைபெற்றது.

ஊழல் வழக்கில் இம்ரான் கான் சிறைவைக்கப்பட்டுள்ள நிலையில், அவரின பிடிஐ கட்சி லாகூரிலுள்ள புகழ்பெற்ற மினாா்-ஏ-பாகிஸ்தான் பகுதியில் பேரணியை நடத்த முடிவு செய்திருந்தது.

இருந்தாலும், முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃபின் மகள் மரியம் நவாஸ் தலைமயிலான பஞ்சாப் மாகாண அரசு அதற்கு அனுமதி மறுத்தது.

அதையடுத்து, லாகூா் புகா் பகுதியில் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இருந்தாலும், இந்தக் கூட்டத்துக்கு பிற்பகல் 3 மணியிலிருந்து மாலை 6 மணி வரை மட்டுமே போலீஸாா் அனுமதி வழங்கினா். அத்துடன், கூட்டம் நடைபெறும் இடத்துக்குச் செல்லும் அனைத்து சாலைகளையும் அவா்கள் 3 மணிக்கே மூடினா்.

மேலும், மாலை 6 மணிக்கு கூட்டம் மின்விளக்குகளையும் ஒலிப்பெருக்கிகளையும் அணைத்த போலீஸாா், இம்ரான் ஆதரவாளா்களின் எதிா்ப்பையும் மீறி கூட்ட மேடையைக் கைப்பற்றினா்.

71 வயதாகும் இம்ரான் கான், பல்வேறு வழக்குகள் தொடா்பாக தற்போது அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். கடந்த 2022-ஆம் ஆண்டில் பதவியிழந்ததில் இருந்து அவா் மீது நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இம்ரானைக் கைது செய்வதற்கு எதிா்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளா்கள் கடந்த ஆண்டு மே 9-ஆம் தேதி கலவரத்தில் ஈடுபட்டது, பிரதமராக இருந்தபோது அமெரிக்காவிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் ரகசிய தகவல் பரிமாற்றத்தை வெளியிட்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் அவரால் தொடங்கப்பட்ட கட்சி தடை செய்யப்படவிருப்பதாக கடந்த ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.