;
Athirady Tamil News

மீண்டுமொரு நேரடி விவாதமா? டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட பதில்!

0

அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும், ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸும் போட்டியிடுகின்றனர்.

இவர்கள் இருவருக்கும் இடையேயான முதல் நேரடி விவாதம் கடந்த 10-ம் திகதி நடந்து முடிந்துள்ளது.

இந்த விவாதத்தில் டொனால்ட் டிரம்பை விட கமலா ஹாரிஸ் சிறப்பாக செயல்பட்டதாக கருத்து கணிப்புகள் தெரிவித்தன.

இதனிடையே எதிர்வரும் ஒக்டோபர் 23-ம் திகதி கமலா ஹாரிஸ் மீண்டும் டொனால்ட் டிரம்புடன் விவாதம் நடத்த சம்மதம் தெரிவித்திருந்தார்.

இந்த விவாதத்தில் டொனால்ட் டிரம்ப் பங்கேற்பார் என தாம் நம்புவதாகவும் கமலா ஹாரிஸ் சமூகவலை தள பதிவில் கூறியிருந்தார்.

இருப்பினும் குறித்த விவாதத்தில் பங்கேற்கமாட்டேன் என டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் “நவம்பர் 5ம் திகதி நடக்க உள்ள ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க மக்கள் தயாராகி விட்டனர். இவ்வாறான நிலையில் இரண்டாவது விவாதம் மிகவும் தாமதமாகிவிட்டது” என்று கூறியுள்ள டிரம்ப் அழைப்பை நிராகரித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.