;
Athirady Tamil News

வட மாகாண ஆளுநர் பதவியை இராஜினாமா செய்தார்

0

இலங்கையில் நடந்து முடிந்த 9அவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்று ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார்.

இதன்படி, நேற்றைய தினம் கொழும்பில் அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார்.

இவ்வாறான நிலையில் புதிய ஜனாதிபதி அநுரவின் கீழ் புதிய அரசாங்கம் அமைக்கப்படவுள்ள நிலையில், அமைச்சர்கள், ஆளுநர்கள் என பலர் தங்களது பதவிகளை இராஜினாமா செய்து வருகின்றனர்.

இதன்படி, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக ஆளுநரின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.