;
Athirady Tamil News

யாழ்ப்பாணம் – கொழும்புத்துறையிலிருந்து யாழ் நகர் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தின் சாரதி மீது வாள்வெட்டு

0

யாழ்ப்பாணம் – கொழும்புத்துறையிலிருந்து யாழ் நகர் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தின் சாரதி மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மணியந்தோட்டம் 11வது குறுக்கு வீதியில் இன்று மாலை இரண்டு மோட்டார் சைக்கிள்களில் முகத்தை மூடிக் கொண்டு வந்தவர்கள் குறித்த தாக்குதலை நடத்தினர்.

குறித்த சாரதி கைகளில் காயம் ஏற்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் யாழ்.பஸ் நிலையத்தில் சில யுவதிகளை கிண்டல் செய்த இளைஞர்களை எச்சரிக்கை விடுத்ததாகவும், இதனாலேயே குறித்த இளைஞர்கள் சாரதியை காயப்படுத்தியுள்ளதாக காயமடைந்தவர்களின் உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.