;
Athirady Tamil News

புவிசார் அரசியல் மோதலில் சிக்கிக்கொள்ள இலங்கை விரும்பவில்லை : அநுர சுட்டிக்காட்டு

0

இந்தியாவிற்கும் (India) சீனாவிற்கும் (China) இடையிலான புவிசார் அரசியல் மோதலில் சிக்கிக்கொள்வதற்கு இலங்கை விரும்பவில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

சர்வதேச சஞ்சிகையொன்றிற்கு வழங்கியுள்ள பேட்டியில் புவிசார் அரசியல் மோதல்களில் இருந்து விலகியிருப்பதற்கான தனது அரசாங்கத்தின் விருப்பத்தினையும் அவர் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, “எனது தலைமைத்துவத்தின் கீழ் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இலங்கையின் இரண்டு நெருங்கிய அயல் நாடுகளான சீனா இந்தியாவுடன் சமநிலையான உறவுகளை பேண முயலும். குறிப்பிட்ட ஒரு நாட்டுடன் தன்னை இணைத்துக்கொள்ள முயலாது.

புவிசார் அரசியல் மோதல்
புவிசார் அரசியல் மோதலில் நாங்கள் ஒரு பகுதியாக மாறமாட்டோம். எந்த தரப்புடனும் இணைந்து கொள்ளமாட்டோம். சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் துண்டாடப்படுவதற்கு நாங்கள் விரும்பவில்லை.

இரண்டு நாடுகளும் பெறுமதி மிக்க நணபர்கள், எங்கள் அரசாங்கத்தின் கீழ் அவர்கள் நெருங்கிய சகாக்களாக மாறுவதையும் ஐரோப்பிய மத்திய கிழக்கு ஆபிரிக்காவுடனும் சிறந்த உறவை பேண நாங்கள் விரும்புகின்றோம்.

அதிகரிக்கும் பிராந்திய பதற்றங்களுக்கு இடையில் இலங்கையின் இறைமையை பாதுகாப்பதற்கு இந்த நடுநிலை வெளிவிவகார கொள்கை அவசியம். பரஸ்பரம் சாதகமான இராஜதந்திர உறவுகளை பேணுவதற்கு முயற்சி செய்வேன்.” என தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.