;
Athirady Tamil News

ஜனாதிபதி அநுர முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்ட புதிய ஆளுநர்கள்!

0

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் புதிய ஆளுநர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சரத் அபேகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.

வட மாகாணத்தின் புதிய ஆளுநராக நாகலிங்கம் வேதநாயகம் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

சிரேஷ்ட நிர்வாக அதிகாரி பந்துல ஹரிச்சந்திர தென் மாகாணத்தின் புதிய ஆளுநராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

சப்ரகமுவ மாகாண ஆளுநராக சம்பா ஜானகி நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்றையதினம் (25-09-2024) 09 புதிய ஆளுநர்கள் ஜனாதிபதியால் பதவிப்பிரமாணம் செய்துகொண்டதாக சப்ரகமுவ மாகாண ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலக வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.