;
Athirady Tamil News

ஆபாச வீடியோ எடுத்து நடிகைக்கு பாலியல் வன்கொடுமை – பிரபல யூடியூபர் ஹர்ஷா சாய் மீது புகார்

0

யூடியூபர் ஹர்ஷா சாய் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஹர்ஷா சாய்
ஏழைகளுக்கு வீடு கட்டி கொடுப்பது, பண உதவி வழங்குவது போன்ற செயல்களை செய்து அந்த வீடியோக்களை யூ டியூப்பில் வெளியிட்டு பிரபலமடைந்தவர் ஹர்ஷா சாய். இவருக்கு யூ டியூப்பில் 8 மில்லியனுக்கு மேலான சந்தாதாரர்கள் உண்டு.

இந்நிலையில் இவர் தன்னை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி ஆபாசமாக வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டுவதாக 25 வயது நடிகை புகார் அளித்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை
தெலங்கானா மாநிலத்தில் அமைந்துள்ள நரசிங்கி காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில், தனியார் நிகழ்ச்சி ஒன்றில் ஹர்ஷா சாயை முதன்முதலில் சந்தித்தாக குறிப்பிட்டுள்ள அந்த நடிகை பின்னர் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்தாக கூறப்படுகிறது.

இவர் அந்த நடிகையை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகவும் அந்த நடிகையின் நிர்வாண புகைப்படம் மற்றும் வீடியோக்களை வைத்து மிரட்டி 2 கோடி வரை பணம் பறித்துள்ளார்.

தலைமறைவு
இந்த புகாரின் அடிப்படையில் ஹர்ஷா சாய் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் அவரை தேடி வருகின்றனர். தான் மீது சுமத்தப்பட்டது பொய் புகார் என்றும் தன் வழக்கறிஞர் இந்த புகாரை சட்டப்படி எதிர்கொள்வார் என்றும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட பின் செல் போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார்.

இவர் ஏழை மக்களுக்கு உதவி செய்வதை பார்த்து மிஸ்டர் பீஸ்ட் ஆஃப் இந்தியா என்று அழைத்த ரசிகர்கள் இவர் மீது எழுந்துள்ள பாலியல் புகார், பண பறிப்பு புகாரை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.