;
Athirady Tamil News

கடமைகளை பொறுப்பேற்றார் கிழக்கின் புதிய ஆளுனர்

0

திருகோணமலையில் உள்ள ஆளுனர் செயலகத்தில் இன்று (26) கிழக்கு மாகாண ஆளுநராக ஜயந்த லால் ரத்னசேகர தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பேராசிரியரான ஜயந்த லால் ரத்னசேகரவை ஆளுநராக நியமித்துள்ளார்.

குறித்த நிகழ்வில் மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி எஸ் ரத்நாயக்க , ஆளுனர் செயலக செயலாளர் எல்.பி மதநாயக்க ,மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண திணைக்கள தலைவர்கள் , தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழு உறுப்பினர் அருண் ஹேமச்சந்திர மற்றும் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக செயற்பட்டுள்ள இவர் கந்தளாய் அக்ரபோதி வித்தியாலய பழைய மாணவருமாவார். இவர் இலங்கையின் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக 2017 பெப்ரவரி முதல் நவம்பர் 2023 வரை பணியாற்றியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.