;
Athirady Tamil News

யாழில் விபத்து; இ.போ.ச மற்றும் தனியார் பேருந்து போட்டியில் விபரீதம்

0

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி பாலத்தடியில் இன்று (26) காலை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த முதியவர் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காரைநகர் – யாழ்ப்பாணம் இடையே சேவையில் ஈடுபடும் அரச பேருந்தும், தனியார் பேருந்தும் போட்டி போட்டுக் கொண்டு வந்தது.

முதியவரை மோதிய இ.போ.ச

இந் நிலையில், அராலி அம்மன் கோவில் பகுதியில் இருந்து வந்து பிரதான வீதிக்கு நுழைந்த மோட்டார் சைக்கிள் மீது அரச பேருந்து மோதியுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த முதியவர் படுகாயம்டைந்த நிலையில் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

மேலும் விபத்து சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.