;
Athirady Tamil News

குழந்தைகளை துடிதுடிக்க கொன்ற தந்தை..அடுத்த நொடியில் தூக்கு – அதிகாலை நடந்த பயங்கரம்!

0

குடும்ப தகராறு காரணமாக 2 பெண் குழந்தைகளைக் கொலை செய்து விட்டு தந்தை தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குடும்ப தகராறு

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சேதுபதி – ராஜேஸ்வரி தம்பதியினர் . இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ரக்ஷிதா, ரக்‌ஷனா இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே கடந்த சில மாதங்களாகத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் சில தினங்களுக்கு முன்பு ராஜேஸ்வரி வீட்டை விட்டு வெளியேறி உறவினர்கள் வீட்டில் தங்கியுள்ளார். இதனையடுத்து சேதுபதி தனது மனைவியைச் சமாதானம் செய்து அழைத்து வந்துள்ளார். பின்னர் கணவர் சேதுபதி கணினி வகுப்பில் சேர்த்துவிட்ட நிலையில் ராஜேஸ்வரி கணிணி வகுப்பு படித்துவந்துள்ளார்.

வழக்கம் போல் ராஜேஸ்வரி கணிணி வகுப்பு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த ராஜேஸ்வரி கதவைத் திறந்துபார்த்த போது இரு குழந்தைகளும் கத்தியால் குத்தியும் கம்பியால் கழுத்தை நெரித்தும் கொலைசெய்யப்பட்டுக் கிடந்தனர்.

பயங்கரம்

பின்னர் தந்தை சேதுபதியும் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து ராஜேஸ்வரி கூச்சலிட்டுள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அண்ணாநகர் காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர் .

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இரு குழந்தைகளின் உடலை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.பின்னர் தற்கொலைக்கு முயன்ற சேதுபதி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மதுரையில் இரண்டு பெண் குழந்தைகளுக்குக் கொலை செய்துவிட்டு தந்தையும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தொடர்ந்து சேதுபதியின் மனைவி ராஜேஸ்வரியிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.