;
Athirady Tamil News

ஊழியரிடம் காப்பியும், முட்டையும் கேட்ட நிறுவன தலைவர்: பணி நீக்கத்தால் வெடித்த சர்ச்சை!

0

சீனாவில் கல்வி நிறுவனம் ஒன்றில், புதிய ஊழியர் ஒருவர் தனது தொழில்முறை தலைவரின் அன்றாட காலை உணவு கோரிக்கையை நிறைவேற்ற மறுத்ததால் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார், இது இணையத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

பணி நீக்கம் செய்யப்பட்ட பெண்
சவுத் சைனா போஸ்ட்டின் அறிக்கையின்படி, லோ(Lou) என்ற குடும்பப்பெயரால் அடையாளம் காணப்பட்ட அந்த பெண், சீன சமூக ஊடக பயன்பாட்டான Xiaohongshu-வில் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

அதில், அவரது தலைவர் லியு(Liu), தினமும் “சூடான அமெரிக்கானோ மற்றும் ஒரு முட்டை” கொண்டு வரும்படி வலியுறுத்தியதையும், ஒரு பாட்டில் தண்ணீரை தயாராக வைத்திருக்கும்படி கூறியதையும் அவர் நினைவு கூர்ந்தார். இந்த பணிகள் தனது வேலை விவரத்தில் இடம்பெறவில்லை என்றும், அவை நியாயமற்ற கோரிக்கைகள் என்றும் லோ தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

இதனை தனது பணி விவாத குழுவில் எழுப்பியபோது, அவர் கண்டிக்கப்பட்டதுடன், பின்னர் இழப்பீடு இல்லாமல் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மீண்டும் பணிக்கு திரும்பிய பெண்
இந்த சம்பவம் இணையத்தில் கவனத்தை பெற்றுள்ள நிலையில், நெட்டிசன்கள் ஊழியரை நிறுவனம் நடத்திய விதத்திற்காக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், பொது மக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து, நிறுவனம் ஊழியரை மீண்டும் பணியில் சேர்க்க முடிவு செய்து இருப்பதுடன், தவறான கோரிக்கைகளை முன்வைத்த தலைவரை பணி நீக்கம் செய்துள்ளது.

நிறுவனத்தின் HR தலைவர் வாங், லோவின் ஆரம்பகால பணி நீக்கம் தலைவரின் முடிவாக இருந்ததே தவிர, நிறுவன கொள்கைகளால் அல்ல என்று தெளிவுபடுத்தினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.