;
Athirady Tamil News

நள்ளிரவில் ராணி கமீலாவின் கழுத்தை நெறித்த ஆவி: மகன் கூறும் திகில் கதை

0

தாங்கள் குடும்பமாக 13 ஆண்டுகள் வாழ்ந்த வீட்டில் ஆவிகள் நடமாட்டம் இருந்ததைக் குறித்து, சமீபத்தில் பேசியுள்ளார் ராணி கமீலாவின் மகன்.

நள்ளிரவில் ராணி கமீலாவின் கழுத்தை நெறித்த ஆவி
கமீலா, இளவரசர் சார்லசைத் திருமணம் செய்யும் முன் ஆண்ட்ரூ பார்க்கர் (Andrew Parker Bowles) என்பவரைத் திருமணம் செய்திருந்தார். 1973 முதல் 1995 வரை, இருவரும் இணைந்து வாழ்ந்தார்கள்.

அதற்குப் பின் ஆண்ட்ரூவை விவாகரத்து செய்துவிட்டு சார்லசை மணந்தார் கமீலா.

கமீலா ஆண்ட்ரூ பார்க்கர் தம்பதியருக்கு பிறந்த மகனான டாம் பார்க்கர்தான் இப்போது தங்கள் இளமைக்காலத்தில் நடந்த சம்பவம் ஒன்றை இப்போது பகிர்ந்துகொண்டுள்ளார்.

இங்கிலாந்தில், Chippenham என்னுமிடத்திலுள்ள Bolehyde Manor என்னும் வீட்டில் 13 ஆண்டுகளாக ஆண்ட்ரூ, கமீலா குடும்பம் வாழ்ந்துவந்தது.

ஒரு நாள் நள்ளிரவில் திடீரென எழுந்த கமீலா, தன்னை ஏதோ கழுத்தைப் பிடித்து தரையுடன் தள்ளியதை உணர்ந்ததாக கூறியுள்ளார்.

அது ஒரு ஆவி என்பதை உணர்ந்துகொண்ட தைரியசாலியான கமீலா, அந்த ஆவியை அங்கிருந்து செல்லும்படி சத்தமாக துரத்தினாராம்.

தாங்கள் வாழ்ந்த அந்த வீட்டிலுள்ள சில அறைகளுக்குச் செல்ல தாங்கள் வளர்த்த நாய்கள் கூட பயப்படும் என்கிறார் டாம். அத்துடன், கோடையில் கூட, அந்த அறைகளுக்குள் சென்றால் கடுமையாக குளிராக இருக்கும் என்கிறார் அவர்.

விடயம் என்னவென்றால், இப்போது கமீலா வாழும் அரண்மனையும் கொஞ்சமும் சளைத்ததல்ல. அங்கும் சில அறைகளுக்குச் செல்ல பணியாளர்கள் பயப்படுவதாகக் கூறப்படுவதுண்டு!

You might also like

Leave A Reply

Your email address will not be published.