;
Athirady Tamil News

கோப்பாயில் கலாசாலை நிறுவிய நாள் விழா

0

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் 101 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் கலாசாலை தின விழா 01.10.2024 செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிக்கு கலாசாலை ரதிலக்க்ஷ்மி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் இடம்பெறும். இந் நிகழ்வில் கலாசாலையின் பழைய மாணவரும் இ யாழ்ப்பாண வலயக்கல்விப் பணிப்பாளருமாகிய திருமதி. ஜமுனா ராஜசீலன் பிரதம விருந்தினராக கலந்து கொள்வார்.

கலாசாலை நிறுவுவதற்கு நிலத்தை வழங்கிய சேர் பொன் இராமநாதனை கௌரவப்படுத்தும் வகையில் இராமநாதன் நினைவுப் பேருரை இடம்பெறவுள்ளது.

‘ஆசிரிய கல்வியியலாளர்களின் தத்துவ ஆராய்ச்சிப் பட்டங்கள் தொடர்பில் மேற்கிளம்பும் சவால்களும் அவற்றை தாண்டிப் பயணித்தலும் ‘ என்ற பொருளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல்துறை விரிவுரையாளர் திரு இ.சர்வேஸ்வரா நினைவுப் பேருரை ஆற்றுவார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.