;
Athirady Tamil News

யாழில். கணவாய் பிடிக்க கடலுக்கு சென்றவர் உயிரிழப்பு

0

கணவாய் பிடிப்பதற்காக கடலுக்கு அடியில் வலைகளை கட்டுவதற்காக கடலுக்கு சென்ற கடற்தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் – காக்கை தீவு பகுதியை சேர்ந்த கனகராசா சுரேஷ்குமார் (வயது 39) என்பவரே உயிரிழந்துள்ளார்.

நேற்று(28) காலை காக்கை தீவு பகுதியில் இருந்து தனது சக தொழிலாளிகள் ஐவருடன் கணவாய் பிடிப்பதற்கான வலைகளை கடலுக்கு அடியில் கட்டுவதற்காக கடலுக்கு படகில் சென்றுள்ளார்.

படகில் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மயக்கம் அடைந்துள்ளார். உடனடியாக சக தொழிலாளிகள் படகை கரைக்கு திருப்பி , வைத்தியசாலைக்கு அவரை அழைத்து சென்ற போதிலும் , அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என மருத்துவர்கள் அறிக்கையிட்டனர்.

உடற்கூற்று பரிசோதனையின் போது மாரடைப்பால் மரணம் சம்பவித்ததாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.