;
Athirady Tamil News

ஐ.எம்.எப் வேலைத்திட்டத்தை விட்டு ஒதுங்கிய மத்திய வங்கி

0

புதிய அரசாங்கத்தின் கீழ் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் எவ்வாறு முன்னெடுக்கப்படும் என்பது குறித்து கலந்துரையாடுவது நிதி அமைச்சின் பொறுப்பாகும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க (Nandalal Weerasinghe) தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் தலைமையகத்தில் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே மத்திய வங்கியின் ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அதன் காரணமாக, புதிய அரசாங்கத்தின் கீழ் ஐ.எம்.எப் வேலைத்திட்டம் எவ்வாறு முன்னெடுக்கப்படும் என்பது குறித்து மத்திய வங்கி கருத்து தெரிவிப்பது கடினம் என்றும் மத்திய வங்கி ஆளுநர் கூறியுள்ளார்.

மூன்றாவது மீளாய்வு

நிலைத்தன்மை பகுப்பாய்வை மாற்றுவது அல்லது தற்போதுள்ள இலக்குகளை மாற்றுவது குறித்து விவாதிக்கும் முடிவு நிதி அமைச்சின் முடிவு என்றும் மத்திய வங்கி அதில் ஈடுபடவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கூறியதாவது, “தற்போதுள்ள கடன் நிலைத்தன்மை பகுப்பாய்வின்படி தொடருமா, அதற்கேற்ப கடன் மறுசீரமைக்கப்படுமா அல்லது மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படுமா என்பது குறித்து கருத்து தெரிவிப்பது கடினம்.

அதுபற்றி நிதி அமைச்சகம் முடிவெடுக்க வேண்டும். நான் நினைப்பது போல், இந்த திட்டம் இப்போது முடிவுக்கு வந்துவிட்டது.

அதேவேளை, நிதியமைச்சு இந்த கடன் மறுசீரமைப்பை கூடிய விரைவில் முடித்து, சர்வதேச நாணய நிதியத்துடனான மூன்றாவது மீளாய்வை விரைவில் நிறைவு செய்யும் என ஜனாதிபதி அறிவித்திருந்தார். அதன் மூலம், நாட்டுக்கும் மக்களுக்கும் ஒரு செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.”என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.