;
Athirady Tamil News

கீரிமலையில் இருந்து கொழும்புக்கு பேருந்து சேவை

0

இலங்கை போக்குவரத்து சபையின் பருத்தித்துறை சாலையினரால் கீரிமலையிலிருந்து கொழும்பிற்கு, இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முதல் பேருந்து சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

கடந்த 2020 ஆண்டுவரை இடம்பெற்ற சேவை பேருந்து இன்மை, மற்றும் சாரதிகள் இன்மை போன்ற காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் மீண்டும் இன்றைய தினம் முதல் இரவு 7:15 மணிக்கு கீரிமலையிலிருந்து புறப்பட்டு காங்கேசன்துறை, தொண்டமனாறு, வல்வெட்டித்துறை ஊடாக பருத்தித்துறையை சென்றடைந்து, பருத்தித்துறையிலிருந்து மந்திகை மாலிசந்தி, நெல்லியடி, துன்னாலை ஊடாக வவுனியா அனுராதபுரம், புத்தளம், சிலாபம் வழியாக கொழும்பை சென்றடையவுள்ளதாக பருத்தித்துறை சாலை முகாமைத்துவம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பருத்தித்துறையிலிருந்து அம்பன் மருதங்கேணி ஊடாக கொழும்புக்கான பேருந்து சேவைகள், சாரதி, மற்றும் பேருந்துகள் பற்றாக்குறை காரணமாக அச் சேவைகள் தொடர முடியாதுள்ளதாகவும் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.