;
Athirady Tamil News

ராஜபக்சர்களால் கொள்ளையடிக்கப்பட்ட பொது நிதி: அநுரவிடம் சவால் விடுத்துள்ள நாமல்

0

ராஜபக்ச ஆட்சியின் போது பொது நிதியை கொள்ளையடித்ததாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை நிரூபிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச(Namal rajapaksa) சவால் விடுத்துள்ளார்.

உகாண்டா மற்றும் சீஷெல்ஸ் உட்பட பல்வேறு நாடுகளில் பொது நிதிகள் கொள்ளையிடப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி முன்னர் தெரிவித்த கூற்றுக்களின் காணொளி காட்சிகளை அவர் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து அதனை நிருபிக்குமாறு சவால் விடுத்துள்ளார்.

நாமலின் சவால்

அத்துடன், ஜனாதிபதி தனது குற்றச்சாட்டுகளை நிரூபிக்க வேண்டிய நேரம் இதுவென்றும் நாமல் ராஜபக்ச பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, “உகாண்டா மற்றும் பல்வேறு நாடுகளில் பில்லியன் கணக்கான டொலர்களை நாங்கள் பதுக்கி வைத்துள்ளோம் என்று ஜனாதிபதியும் அவரது குழுவும் பல ஆண்டுகளாக குற்றம் சாட்டி வருகின்றனர்.

ஜனாதிபதி தனது குற்றச்சாட்டுகளை நிரூபிக்க வேண்டிய நேரம் இது.”என நாமல் ராஜபக்ச பதிவிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.