;
Athirady Tamil News

பாரியளவிலான ஐஸ் போதைப்பொருளுடன் சிக்கிய 20 வயதுடைய இளைஞன்!

0

மாத்தறையில் உள்ள பெலேன – வெலிகம பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் 20 வயதுடைய இளைஞன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபரை மிதிகம, இப்பாவல பகுதியில் வைத்து பொலிஸார் இவ்வாறு கைது செய்துள்ளனர்.

சந்தேகநபரின் மோட்டார் சைக்கிளை சோதனையிட்ட போது 1 கிலோ 838 கிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுற்றிவளைப்பின் போது, ​​அந்த இடத்திலிருந்த மேலும் 3 சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தப்பியோடியவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை மிதிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.