;
Athirady Tamil News

எரிவாயு விலையில் திருத்தம்! முடிவுகளை அறிவித்த லிட்ரோ மற்றும் லாப்ஸ்

0

தமது எரிவாயுவின் விலையில் இம்மாதம் எவ்வித திருத்தமும் மேற்கொள்ளப்படாது என்று லாப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி நிரோசன் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

விலையில் மாற்றமில்லை
ஏற்கனவே நடைமுறையில் உள்ள விலைகளே ஒக்டோபர் மாதமும் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, லிட்ரோ எரிவாயு நிறுவனமும் இம்மாதம் தமது எரிவாயு விலைகளில் மாற்றம் எதனையும் செய்யப் போவதில்லை என்றும் ஏற்கனவே உள்ள விலைகளின் அடிப்படையிலேயே இம்மாதமும் எரிவாயு விற்பனை இடம்பெறும் எனவும் அறிவித்திருந்தது.

அத்துடன், உலக சந்தையில் எரிவாயுவின் விலையில் அதிகரித்துள்ள போதிலும் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் தமது உள்நாட்டு எரிவாயு விலையை அதிகரிக்க வேண்டாம் என்று தாம் தீர்மானித்துள்ளதாகவும் லிட்ரோ நிறுவனம் முன்னதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.