;
Athirady Tamil News

விபத்துகளை குறைக்க வாகன சாரதிகளுக்கு கொத்தமல்லி தேனீர்

0

நாட்டில் ஏற்படும் விபத்துகளை குறைப்பதற்கு பொலிஸார் வாகன சாரதிகளுக்கு கொத்தமல்லி தேனீர் வழங்கி வைக்கும் செயற்திட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர்.

இரவு நேரங்களில் வாகனங்களை செலுத்தும் வாகன சாரதிகளின் உறக்கத்தினால் பல வீதி விபத்துக்களினால் பல உயிர்கள் காவு கொள்ளப்படுகின்றன.

இந்நிலையில் கிளிநொச்சி வீதி போக்குவரத்து பொலிஸார் இரவு நேரங்களில் பயணிக்கும் வாகன சாரதிகள் மற்றும் நடத்துனவர்களுக்கு உறக்க நிலையை தணிக்க கொத்தமல்லி தேனீர் வழங்கி வருகின்றார்கள்.

அந்த வகையில் கிளிநொச்சி வீதி போக்குவரத்து பொலிஸார் இவ்வாறான செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.