;
Athirady Tamil News

பாகிஸ்தானில் காதலுக்காக 13 பேரின் உயிரை பறித்த இளம்பெண்

0

பாக்கிஸ்தானில்(Pakistan) இளம்பெண் ஒருவர் காதலுக்காக குடும்ப உறுப்பினர்கள் 13 பேரை விஷம் வைத்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவம் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள கைபத்கான் புரோகி கிராமத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

சம்பவதினத்தன்று குறித்த இளம்பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்த 13 பேருக்கு ஒரே நேரத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

விசாரணையில் அதிர்ச்சி

இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள், சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி 13 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் அவர்கள் உட்கொண்ட உணவில் விஷம் கலந்திருந்த அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.

இதனைதொடர்ந்து, காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

இதன்போது, உயிரிழந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண் வாலிபர் ஒருவரை காதலித்து வந்த நிலையில், பெண்ணின் பெற்றோர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண், தனது காதலனின் யோசனைபடி, உணவில் விஷம் கலந்துள்ளார்.

இதையறியாத, குடும்பத்தினர் விஷம் கலந்த உணவை உட்கொண்டு அனைவரும் உயிரிழந்துள்ளனர்.

மேலும், குறித்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்த நிலையில் இந்த சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.