;
Athirady Tamil News

திரும்ப ஒப்படையுங்கள் ;முன்னாள் எம்.பிக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு!

0

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் 5 இலட்சம் ரூபா பெறுமதியான இலவச முத்திரைகளில் பயன்படுத்தப்படாதவற்றை அருகில் உள்ள தபால் அலுவலகத்தில் அல்லது நாடாளுமன்றத்தில் ஒப்படைக்குமாறு தபால் திணைக்களம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதையடுத்து, இம்முத்திரைகளைப் பயன்படுத்துவதற்கு தடையென, தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேசயம் குறித்த முத்திரைகளை செல்லுபடியற்றவையாக கருதப்பட வேண்டுமென, நாட்டில் உள்ள அனைத்து தபால் நிலையங்களுக்கும் தபால் மா அதிபர் அறிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.