;
Athirady Tamil News

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலை குழப்ப திட்டம்! சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது

0

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் தினத்தன்று தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த ஆப்கானிஸ்தானை சேர்ந்த நபரொருவரை அமெரிக்க காவல்துறையினர் கைது செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக அமெரிக்க காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, ஆப்கானிஸ்தானை சேர்ந்த 27 வயதுடைய நசீர் அகமத் தவ்ஹெடி என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது நடவடிக்கை

குறித்த சந்தேக நபர் கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவிற்கு வந்துள்ள நிலையில் ஓக்லஹோமா நகரில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், அமெரிக்க காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது நடவடிக்கை தொடர்பில் அமெரிக்க காவல்துறையினர் கூறும்போது,

“அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தினத்தில் தாக்குதல் நடத்த நசீர் அகமத் திட்டமிட்டு இருந்தார்.

அத்துடன், ஏ.கே47 துப்பாக்கியை வாங்க ஆர்டர் செய்துள்ளார்.

மேலும், அவரது மனைவி மற்றும் குழந்தையை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்ப பற்றுச்சீட்டுகளை வாங்கி உள்ளார்” என தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.