;
Athirady Tamil News

நெடுந்தீவில் 21 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது

0

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 21 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு கடற்பரப்பினுள் நான்கு படகுகளில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டிருந்த வேளை நேற்றைய தினம் புதன்கிழமை 21 பேரும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களையும் , அவர்களின் படகுகளையும் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்ற கடற்படையினர் , 21 கடற்தொழிலாளர்களையும் விசாரணைகளின் பின்னர் , நீரியல் வளத்துறையினர் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.