;
Athirady Tamil News

திருகோணமலையில் நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள்!

0

திருகோணமலை (Trincomalee) மாவட்டத்தில் மூன்று அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளினதும் மூன்று சுயேட்சை குழுக்களினதும் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ஆர்.சசீலன் தெரிவித்துள்ளார்.

வேட்புமனுவின் பின் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இன்று (11) மாலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் 20 அரசியல் கட்சிகளும் மற்றும் 17 சுயேட்சை குழுக்கள் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தன.

வேட்பு மனு தாக்கல்

அதில் 17 அரசியற் கட்சிகளும் 14 சுயேட்சை குழுக்களும் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதில் மூன்று கட்சிகளும் மூன்று சுயேட்சை குழுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஜனநாயக முண்ணனி, அகில இலங்கை தமிழர் மகா சபை, ஐக்கிய தேசிய சுதந்திர கூட்டமைப்பு உட்பட மூன்று சுயேட்சை குழுக்களுமே இவ்வாறு நிராகரிக்கப்பட்டது.

சத்தியக் கடதாசி சமர்ப்பிக்காமை , சரியான முறையில் விண்ணப்பம் கையளிக்காமை உள்ளிட்ட காரணங்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

4ம் திகதி தொடக்கம் 11 ம் திகதி இன்று வரை மதியம் 12.00 மணிவரை குறித்த வேட்பு மனு தாக்கல் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.