;
Athirady Tamil News

ஜனாதிபதி மாளிகை ,அலரி மாளிகை தொடர்பில் ஜனாதிபதி – பிரதமர் அதிரடி தீர்மானம்!

0

ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகையை தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்துவதை தவிர்க்க ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய ஆகியோர் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

அந்தவகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தான் இதுவரையில் தங்கியிருந்த வீட்டிலேயே வசித்து வருவதாக கூறப்படுகின்றது.

அதேசமயம் , தனது தனிப்பட்ட தேவைக்கு ஜனாதிபதி மாளிகையை பயன்படுத்தப்போவதில்லை எனவும் ஜனாதிபதி செயலக விடயங்கள் மற்றும் பணி விடயங்களுக்கு மட்டுமே அதனை பயன்படுத்தத் தீர்மானித்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.

அதேவேளை அரச சொத்துக்களை வீண் விரயம் செய்வதை தவிர்த்து பணத்தை சேமிக்கவுள்ளதாக, தேர்தல் பிரச்சாரங்களின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.