;
Athirady Tamil News

இந்தியாவில் ஓட்டுனர் பயிற்சியால் 4 குழந்தைகளுக்கு நேர்ந்த துயரம்!

0

இந்தியாவில்(India) அசாம் மாநிலத்தில் ஓட்டுனர் பயிற்சியின் போது இடம்பெற்ற விபத்தில் 4 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த சம்பவம் அசாம் மாநிலத்தின் கூச்பெஹார் பகுதியில் நேற்று(11.10.2024) இடம்பெற்றுள்ளது.

அசாம் மாநிலத்தின் கூச்பெஹார் பகுதியிலிருந்து தூப்ரி நோக்கி பெண்ணொருவர் ஓட்டுனர் பயிற்சிக்காக கார் ஒன்றை ஓட்டிச் சென்றுள்ளார்.

காவல்துறையினர் விசாரணை

இந்நிலையில், சோனாகுளி பகுதியில் கார் பயணித்துக்கொண்டிருந்த வேளை சாலையோரம் நின்றிருந்த 4 சிறுவர், சிறுமிகள் மீது கார் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

இதன்போது, 3 குழந்தைளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன் படுகாயமடைந்த பிறந்து 40 நாட்களே ஆன குழந்தை, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளது.

அத்துடன், குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் இறந்த 4 குழந்தைகளும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

மேலும், விபத்தை ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்து காவல்துறையினர் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.