;
Athirady Tamil News

வெள்ளத்தால் மேல் மற்றும் தென் மாகாண வீதிகள் முடக்கம்

0

மேல் மற்றும் தென் மாகாணங்களில், வெள்ளம் காரணமாக பல வீதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

அந்தவகையில் களுத்துறை மாவட்டத்திலேயே அதிகளவான வீதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

பண்டாரகம – கொலமதிரிய, பாலிந்தநுவர – பதுரலிய, பரல்லாவிட்ட – அவிட்டாவ, களுத்துறை – மத்துகம, புலத்சிங்கள – மொல்கா ஆகிய வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

மேலும் மினுவாங்கொடை, கட்டான, ஹன்வெல்ல, கடுவெல, கொலன்னாவ, பன்னல, ஹோமாகம உள்ளிட்ட பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.