;
Athirady Tamil News

போலி ஆவணங்களை சமர்ப்பித்து சொகுசு ஜீப் இறக்குமதி; நீதிமன்றம் அதிரடி

0

சுங்கத் திணைக்களத்தில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு ஜீப் ரக வாகனமொன்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் , அந்த வாகனத்தை அரசுடைமையாக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐந்தரை கோடிக்கும் அதிகமான வரி மோசடி

சுங்கத் திணைக்களத்துக்கு போலியான ஆவணங்களை வழங்கி, இந்த ஜீப்பை இறக்குமதி செய்ததில், அரசாங்கத்துக்கு ஐந்தரை கோடிக்கும் அதிகமான வரி மோசடி இடம்பெற்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய, கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதவான் திலின கமகேவால் இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு வாகனம் பதுளையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருடையது என கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.