;
Athirady Tamil News

அழகிய இளம்பெண்ணை சிறைக்கு அனுப்பிய புடின்: அவர் மீதான குற்றச்சாட்டு

0

உக்ரைனுக்கு ஆயுத ரகசியங்களை விற்றதாக குற்றம் சாட்டப்பட்டு இளம்பெண் ஒருவர் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

அழகிய இளம்பெண்ணுக்கு சிறை

புடினுடைய கவச வாகனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் விக்டோரியா என்னும் (Viktoria Mukhametova, 24) என்னும் இளம்பெண் புடின் அரசால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கவச வாகனங்கள் செய்யும் ப்ளூபிரிண்ட்களை உக்ரைனுக்கு விற்றதாக விக்டோரியா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதற்காக விக்டோரியாவுக்கு 12 ஆண்டுகள் 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், 2,400 பவுண்டுகள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

விக்டோரியாவின் கணவரும் அந்த ஆயுத உற்பத்தி தொழிற்சாலையில் வேலை செய்யும் நிலையில், அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

விக்டோரியா, Gulag என்னும் முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ளார். அங்கு அவர் கடுமையான வேலை செய்யவேண்டி இருப்பதுடன், அங்கு வாழும் சூழலும் பயங்கரமாக இருக்கும்.

தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்டுள்ள விக்டோரியா, அந்தக் கொடுமையான சிறையில் 2037ஆம் ஆண்டு வரை அடைக்கப்பட்டிருப்பார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.