;
Athirady Tamil News

2 மணி நேரமாக வானில் வட்டமடித்த திருச்சி விமானம்.., பயணி பகிர்ந்த திக் திக் நிமிடங்கள்

0

திருச்சியில் இருந்து ஷார்ஜா புறப்பட்ட விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சுமார் 2 மணி நேரங்களுக்கு மேலாக விமானம் வானில் வட்டமடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வானில் வட்டமடித்த விமானம்

141 பயணிகளுடன் திருச்சியில் இருந்து ஷார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானமானது, புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அதில் தொழில்நுட்ப கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால், விமானம் தரையிறங்க முடியாமல் சுமார் 2 மணி நேரங்களுக்கு மேலாக விமானம் வானில் வட்டமடித்தது. பின்னர், பயணிகளுடன் பத்திரமாக தரையிறங்கியது.

இந்நிலையில், விமானத்தில் நேர்ந்த திக் திக் நிமிட சம்பவங்கள் குறித்து பயணி ஒருவர் பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், “நாங்கள் திருச்சியில் இருந்து ஷார்ஜாவை நோக்கி பயணம் செய்வதாக நினைத்தோம். ஆனால், அப்போது என்ன நடந்தது என்று எங்களுக்கு தெரியவில்லை.

விமானத்தில் ஏற்பட்ட கோளாறு பற்றி எங்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை. பின்னர் தான், விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதாக கூறினர். அப்போது எங்களை பதற்றம் அடையாமல் சீட் பெல்ட் அணிந்து கொள்ளுங்கள் என்றும் அறிவுறுத்தினர்.

சிறிது நேரத்திற்கு விமானத்தின் விளக்குகள் அணைந்து அணைந்து எரிந்தது. பின்னர், விமானம் தரையிறங்கியது” என்றார்.

இந்நிலையில், விமானிகள் குழுவிற்கு இந்தியா முழுவதும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.