;
Athirady Tamil News

சிறையில் ராமாயண நாடகம்.., சீதையை தேடுவது போல நடித்து கைதிகள் தப்பியோட்டம்

0

சிறையில் நடைபெற்ற இராமாயண நாடகத்தில் சீதையை தேடுவது போல நடித்து கைதிகள் தப்பியோடியுள்ளனர்.

தப்பிய கைதிகள்

இந்திய மாநிலமான உத்தரகாண்ட், ஹரித்வாரில் உள்ள ரோஷ்னாபாத் சிறைச்சாலையில் நவராத்திரி விழாவை முன்னிட்டு கைதிகளை வைத்து ராமாயண நாடகம் நடத்தப்பட்டுள்ளது.

அப்போது, சிறையில் உள்ள கைதிகளில் இருவர், அனுமானின் வானர சேனையில் இடம்பெறும் குரங்குகளாக வேடமிட்டனர். அவர்கள், நாடகத்தின் போது சீதையை தேடுவது போல நடித்து காட்சிக்கு வெளியில் சென்றுள்ளனர்.

ஆனால், அவர்கள் திரும்பி வரவே இல்லை. இதனால், கைதிகள் தப்பியதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

கொலை வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனையிலிருந்த பங்கஜ் என்பவரும், ஆள் கடத்தல் வழக்கில் கைதாகி சிறைக்கு வந்த ராஜ்குமார் என்பவரும் இணைந்து நீண்ட நாட்களாக சிறையில் இருந்து தப்பிக்க திட்டம் தீட்டியுள்ளனர்.

இந்நிலையில், சிறையில் நடந்த இராமாயண நாடகத்தை பயன்படுத்திக்கொண்டு கைதிகள் இருவரும் தப்பிச் சென்றுள்ளனர். இவர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.