;
Athirady Tamil News

வேட்பாளர்களின் விருப்ப எண்கள் தொடர்பில் அறிவிப்பு

0

பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர்களின் விருப்ப எண்கள் அடுத்த வார தொடக்கத்தில் வெளியிடப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

வேட்புமனுக்களின் படி தற்போது அவை அகர வரிசைப்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்கும் பணி நேற்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது.

இதேவேளை நாடாளுமன்றத் தேர்தலில் 22 மாவட்டங்களுக்கு 690 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் போட்டியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், 74 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.