;
Athirady Tamil News

வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியதால் தோணியில் வந்த மணமக்கள்!

0

நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக குடா கங்கை பெருக்கெடுத்து , களுத்துறை வீதி மூழ்கியுள்ளது.

இந்நிலையில் வீதிகளை வெள்ளம் மூடியதால் புதுமண தம்பதியை தோணியில் அழைத்து வந்த சம்பவம் சத்தங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

நிலவி வரும் சீரற்ற காலநிலையுடன், திருமண காருக்கு பதிலாக, அவர்கள் தோணியை பயன்படுத்தியுள்ளனர்.

குறித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில் , மணமக்களை சிலர் கேலி செய்து வரும் நிலையில் , எந்த ஒரு சூழ்நிலையும் தாங்கும், துணிச்சல் மிக்க பொருத்தமான ஜோடி என கூறி பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அதேவேளை தொடர் மழையால் , களுத்துறை, புளத்சிங்கள, மதுராவல மற்றும் ஏனைய பிரதேச செயலாளர் பிரிவுகளின் வீதிகள் நீரில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.