;
Athirady Tamil News

தூக்கில் தொங்கிய நிலையில் தாய், தந்தை! படுக்கையில் சடலமாக பிள்ளைகள்..சிக்கிய குறிப்பு

0

இந்திய மாநிலம் கேரளாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மர்மமான இறப்பு

கேரள மாநிலம் சோட்டாணிக்கரையைச் சேர்ந்த தம்பதி ரஞ்சித் – ராஷ்மி. ஆசிரியர்களாக பணியாற்றி வந்த இவர்களது பிள்ளைகள் ஆதி (9), ஆதியா (7).

ரஞ்சித்தின் குடும்பம் வீட்டில் இறந்துகிடப்பதாக அக்கம்பக்கத்தினர் பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்த ரஞ்சித், ராஷ்மி மற்றும் படுக்கையில் இறந்துகிடந்த அவர்களின் பிள்ளைகளின் உடல்களையும் மீட்டனர்.

விருப்ப குறிப்பு
மேலும், வீட்டில் இருந்து குறிப்பு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதில் தங்களின் உடல்கள் மருத்துவ நோக்கங்களுக்காக தானமாக வழங்கப்பட வேண்டும் என தம்பதியர் விருப்பத்தை குறிப்பிட்டிருந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் நால்வரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பொலிஸார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.