;
Athirady Tamil News

மந்திரவாதம் செய்வதற்காக பெற்ற தாயின் உடலை கூறு போட்ட இளம்பெண்

0

அமெரிக்கப் பெண்ணொருவர், மந்திரவாதம் செய்வதற்காக பெற்ற தாயைக் கொன்று அவரது உடலை கூறுபோட்ட சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

பெற்ற தாயின் உடலை கூறு போட்ட இளம்பெண்

அமெரிக்காவிலுள்ள Kentucky மாகாணத்தைச் சேர்ந்த Torilena Fields (32) என்னும் பெண், தனது தாயைக் கொன்று அவரது உடலைக் கூறுபோட்டு, அவரது உடல் பாகங்களை தனது வீட்டுக்கு உள்ளேயும், வெளியேயும் வீசியுள்ளார்.

Torilena மாயமந்திரம், சூனியம் போன்ற விடயங்களில் ஆர்வம் காட்டி வந்ததால், அவரது தாயாகிய Trudy Fields அவரைக் கண்டித்துள்ளார்.

ஆகவே, தன் தாயையும் கொலை செய்து அவரது உடலைக் கூறுபோட்டு வீசியுள்ளார் Torilena. சமீபத்தில் Trudyயை சந்தித்த ஒருவரிடம் தன் மகள் செய்யும் பயங்கர விடயங்கள் குறித்து ஏற்கனவே அவர் கூறியிருந்த நிலையில், அதனால்தான் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

அவர் பொலிசாருக்கு கொடுத்த தகவலின்பேரில் பொலிசார் Torilena வீட்டுக்கு வர, அவர் வீட்டுக்குள் பதுங்கியுள்ளார்.

பின்னர் கண்ணீர் புகை குண்டுகளை வீட்டுக்குள் வீசி அவரை வெளியே வரவைத்த பொலிசார், உடல் முழுவதும் இரத்தத்துடன் காணப்பட்ட Torilenaவை கைது செய்துள்ளார்கள்.

அவரிடம் பொலிசார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.