;
Athirady Tamil News

கனடா – இந்தியா விரிசலுக்கு கனடா பிரதமர் மட்டுமே பொறுப்பு

0

இந்தியா-கனடா உறவுகளில் ஏற்படுத்தப்பட்ட சேதத்திற்கு கனடா பிரதமர் மட்டுமே பொறுப்பு என இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதற்கான வலுவான ஆதாரங்கள் இல்லை என்று கனடா பிரதமர் கூறியது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளதாவது,

நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இல்லை என்று நாங்கள் தொடர்ந்து தெரிவித்து வருவது உறுதியாகி இருக்கிறது.

இந்தியா மற்றும் இந்திய தூதர்களுக்கு எதிராக கூறிய கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு கனடா எங்களிடம் எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை.

எனவே கனடா – இந்தியா விரிசலுக்கு கனடா பிரதமர் மட்டுமே பொறுப்பு என்றும் இந்திய வெளியுறவுத் துறை கூறியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.