;
Athirady Tamil News

உக்ரைன்-ரஷ்யா போரில் 12,000 வட கொரிய வீரர்கள்: சர்வதேச சமூகங்களுக்கு தென் கொரியா எச்சரிக்கை!

0

வட கொரியா கிட்டத்தட்ட 12,000 ராணுவ வீரர்களை ரஷ்யா சார்பாக உக்ரைன் போரில் சண்டையிட அனுப்பி வைத்து இருப்பதாக தென்கொரியா குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது.

தென் கொரியா குற்றச்சாட்டு
வட கொரியா தன்னுடைய ராணுவ படைகளை ரஷ்யாவிற்கு அனுப்பியதாக நம்புவதாக வெள்ளிக்கிழமை தென் கொரியா தெரிவித்துள்ளது.

மேலும் இது சர்வதேச சமூகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும், அதற்கு எதிராக தென் கொரியா கிடைக்கும் அனைத்து வழிகளிலும் பதிலளிக்கும் என்று தென் கொரிய ஜனாதிபதி அலுவலகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நாட்டின் உளவு அமைப்பு வழங்கிய தகவலின் படி, வட கொரியா உக்ரைன் போரில் ஈடுபட்டு இருப்பதாகவும், சிறப்பு படை பிரிவு உட்பட 12,000 வீரர்களை அனுப்ப முடிவு செய்து இருப்பதாகவும் Yonhap செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

அவசர கூட்டம்
இந்நிலையில் தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல்(Yoon Suk Yeol) உளவு, இராணுவ மற்றும் நாட்டின் பாதுகாப்பு அதிகாரிகளுடன் திட்டமிடப்படாத அவசர பாதுகாப்பு கூட்டத்தை கூட்டி, உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் நடவடிக்கையில் வட கொரியா ராணுவ வீரர்கள் தலையீடு குறித்து விவாதித்துள்ளனர்.

இதில் பங்கேற்ற முக்கிய அதிகாரிகள் ராணுவ ஆயுத விநியோகங்களை தாண்டி தற்போது வீரர்களை அனுப்பும் அளவிற்கான வட கொரியா – ரஷ்யா நெருக்கம், தென் கொரியாவிற்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த சர்வதேச சமூகங்களுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.